அரசு மருத்துவமனை செவிலியரிடம் வீடு புகுந்து 7 சவரன் தாலி பறிப்பு

அரசு மருத்துவமனை செவிலியரிடம் வீடு புகுந்து 7 சவரன் தாலி பறிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவலூர் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் லாரி டிரைவர், இவருடைய மனைவி ரோஸ்லின் ஆனந்தி (43). இவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் ரோஸ்லின் ஆனந்தி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஏழு சவரன் மதிப்புள்ள தாலி செயினை வலுக்கட்டாயமாக அடித்து பறித்துச் சென்றுள்ளார்.

இதில் இவருக்கு நெற்றி மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று வெள்ளக்கல் காசா நகரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஆராயி (65) என்ற பெண்மணியிடம்

நேற்று இரவு இவர் அணிந்திருந்த நகையை பறிக்க மர்ம நபர் முற்பட்டபோது கத்தி கூச்சலிடவே மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். மணப்பாறை பகுதியில் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn