ஸ்ரீரங்கம் கோயில் அலுவலகம் முற்றுகை

ஸ்ரீரங்கம் கோயில் அலுவலகம் முற்றுகை

 ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரம் முன்பாக இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அறநிலையத்துறை கோவில் நிர்வாகம் அலட்சியத்தால் கோபுரங்கள் சுண்ணாம்பு காரைகள் கருங்கற்கள் விழுந்ததாக கோஷங்கள் எழுப்பியவாறு சாலையில் நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கோயில் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

 வெள்ளை கோபுரத்தின்ள்ளே காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி உள்ளே புகுந்து கொடிகளுடன் கோயிலுக்குள் சென்று கோஷங்கள் எழுப்பி சென்று கொண்டிருக்கின்றனர்

 

ஆகஸ்ட் 8ஆம் தேதி தமிழகத்தில் கோயில்கள் பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் இதனை கண்டித்து இந்து முன்னணியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபெற உள்ளதாக இந்து முன்னணியின் திருச்சி கோட்ட செயலாளர் போஜராஜன் செய்தியாளிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே இருக்கும் கோயில் அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து இந்து முன்னணியினர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளரிடம் இந்து முன்னணியினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn