திருச்சியில் காரில் ஏசி ஓடிக்கொண்டிருந்த நிலையில் மூன்று நாள் அழுகிய உடல் பரபரப்பு - விசாரணை

திருச்சியில் காரில் ஏசி ஓடிக்கொண்டிருந்த நிலையில் மூன்று நாள் அழுகிய உடல் பரபரப்பு - விசாரணை

திருச்சி கோனக்கரை பகுதியில் கார் நின்று கொண்டே இருந்துள்ளது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் காருக்குள் யாரோ ஒருவர் படுத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் வந்து காரை சோதனை செய்தது போது ஆண் ஒருவர் படுத்த  நிலையில் இருந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 மூன்று நாளாக அவரது உடல் அழுகிய நிலையில் காருக்குள் இருந்துள்ளது.இந்த கார் கரூர் மாவட்ட பதிவின் கொண்டதாக உள்ளது அந்த பதிவின் அடிப்படையில் அந்த காரின் உரிமையாளர் பெயர் ஆடலரசு முதலைப்பட்டி குளித்தலை என முகவரி வந்துள்ளதாக உறையூர் காவல் நிலைய போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.காரின் உள்ளே ஏசி ஓடிக்கொண்டே இருந்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலைப்பட்டி பகுதியில் இருந்து ஊர் தலைவர்கள் வந்து நேரில் யார் இவர் என்று அடையாளம் காண்பிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.