ஜி.எஸ்.டி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதித்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், வயர்லெஸ் ரோடு பகுதியில் சாலைகள் சீரமைப்பதில் மெத்தனம் காட்டும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மேலும் 30ம் தேதி நடைபெறும் ஒரு மாநிலம் தருவியா மறியல் போராட்டத்தின் கோரிக்கை வலியுறுத்திம் பொன்மலை பகுதி துணைச் செயலாளர் தோழர் ராஜா தலைமையில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் சிவா கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் கட்சியின் மூத்த தோழர்கள் பொன்னுதுரை, சுந்தர்ராஜ், பகுதி செயலாளர் பால்கிருஷ்டி, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் இப்ராகிம், தலைவர் பாட்ஷா, இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் முருகேசன், விஷ்வா மற்றும் பகுதி குழு தோழர்கள் சந்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO