வினோத் கண் மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை!!

வினோத் கண் மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை!!

கண் பார்வையின்மை மற்றும் கண் பார்வை குறைபாடு பற்றிய விழிப்புணர்வை உலக மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வியாழக்கிழமையை உலக பார்வை தினமாக கடைபிடித்து வருகிறது.

இந்த வருடம் அக்டோபர் 10, 2024 அன்று இத்தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த வருடம் குழந்தைகளின் கண் பாதுகாப்பினை உறுதி செய்வதை மையகருத்தாக கொண்டு உலக பார்வை தினம் கடைபிடிக்கப்படவுள்ளது. 

இதனை தொடர்ந்து திருச்சி தில்லைநகர் இரண்டாவது குறுக்கு சாலையில் அமைந்துள்ள வினோத் கண் மருத்துவமனையில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 30 வரையிலான ஒரு மாத காலத்திற்கு இலவச கண் ஆலோசனை அளிக்கப்படுகிறது. 

மேலும் பார்வை அளவிடுதல், புகைப்படத்துடன் கூடிய விழித்திரை பரிசோதனை, கருவிழி தடிமன் அளவிடுதல், கண் நீர் அழுத்தம் பரிசோதனை, பக்க பார்வை அளவிடுதல் போன்ற 2500 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. 

எட்டு வருடத்திற்கும் மேல் அரவிந்த கண் மருத்துவமனையில் அனுபவமுள்ள வினோத் கண் மருத்துவமனையின் மருத்துவ முதன்மை இயக்குனர் மருத்துவர் வினோத் அவர்களின் ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision