தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் வருகிற செவ்வாய்க்கிழமை (தேதி 11. 10. 22) கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துகிறது.

கல்லூரி முதல்வர் தலைமை ஏற்க, ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி திருமதி சுபா பிரபு வாழ்த்துரை வழங்க, அனைத்து நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்யும் இந்த கண் சிகிச்சை முகாமிற்கு கல்லூரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO