கக்கன் புகைப்படம் அகற்றம் காங்கிரஸ் மாவட்ட  தலைவரை நீக்கம் செய்ய ஆர்ப்பாட்டம்

கக்கன் புகைப்படம் அகற்றம் காங்கிரஸ் மாவட்ட  தலைவரை நீக்கம் செய்ய ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான
அருணாச்சலம் மன்ற  வாயிலில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 17- 4 -22 அன்று மன்றத்தில் தியாகி கக்கன் போட்டோ திறப்பு விழா நடைபெற்றது. இந்த  நிகழ்வு முடிந்து நாங்கள் சென்ற பின்னர் தியாகி கக்கன் போட்டோவை மாவட்டத் தலைவர் ஜவஹர் தூக்கி எறிந்து விட்டார்.

இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே உடனடியாக மாநிலத் தலைவர் அழகிரி  தலையிட்டு மாவட்டத் தலைவர் ஜவஹர்யை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கக்கனின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு

காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக அவரது படத்தை அலுவலகத்தில் வைக்க வேண்டும் இல்லை என்றால் தாங்கள் வைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் முரளி கள்ளத்தெரு குமார் ஜி எம் ஜி மகேந்திரன் ஜீவா நகர் மாரிமுத்து வார்டு தலைவர் பாலசுப்பிரம மணியன் முருகன் சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன் மன்சூர் கலைப்பிரிவு மாவட்ட தலைவர் ராகவேந்திரா பிரியங்கா காந்தி ஆனந்தி நாச்சிகுறிச்சி கவுன்சிலர் அருண் பிரசாத்

எஸ்சி எஸ்டி மாவட்ட செயலாளர் வினோத்குமார் ஜான் கோப்பு தீ ரவி ஏர்போர்ட் கௌதம் ஆட்டோ பாலு ரஹ்மான் பஜ்ஜி போட்டோ பாலா மலைக்கோட்டை சிவா ஆனந்து மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO