திருச்சி விமான நிலையத்தில் 72 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 72 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த 3 பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையில் அவர்களிடம் 1197.5 கிராம் எடையுள்ள 72 லட்சத்து 73 ஆயிரத்து 781 ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது சோதனையில் தெரியவந்தது.

இரண்டு பயணிகள் கோலாலம்பூரில் இருந்தும் ஒருவர் துபாயில் இருந்தும் கொழும்பு வழியாக திருச்சி வந்தவர்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மூன்று பயணிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision