திருச்சி விமான நிலையத்தில் தங்க லுங்கிகள்

திருச்சி விமான நிலையத்தில் தங்க லுங்கிகள்

திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு விமானங்கள் வருகின்றன.

இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் பயணித்து வருகின்றனர் இந்த நிலையில், துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணியின் உடகளில் இருந்த லுங்கியில் தங்க நூல் இழைகளாக நெய்து நூதன முறையில் தங்கம் கடத்தி வரப்பட்டது வான் நூண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மூலம் தெரியவந்துள்ளது.

281 கிராம் தங்கத்தை ஏழு லுங்கிகளில் கடத்தி வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 16 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision