திருச்சி மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம்

திருச்சி மனமகிழ் மன்றத்தில்  சூதாட்டம்

திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள மனமகிழ் மன்றத்தில் மது அருந்திவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை துவாக்குடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே துவாக்குடி சுங்கச்சாவடி அருகே தனியார் மனமகிழ் மன்றம் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.

 இந்த மனமகிழ் மன்றத்தில் வருபவர்கள் மது அருந்திவிட்டு பணம் வைத்து சூதாடுவதாக துவாக்குடி இன்ஸ்பெக்ட்டர் ஈஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருச்சி எஸ் பி வருண்குமார் உத்தரவின் பேரில்

திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மேற்பார்வையில் ஈஸ்வரன் தலைமையிலான துவாக்குடி போலீசார் அதிரடியாக மனமகிழ் மன்றத்தில் சோதனை ஈடுப்பட்ட பொழுது அங்கு மது அருந்திக்கொண்டு பணம் வைத்து சீட்டு கொண்டிருந்த 24 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ 9 ஆயிரத்து 300  ரொக்கத்தை பறிமுதல் செய்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பின்னர் அவர்கள் அனைவரையும் ஜாமினில் விடுதலை செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக  தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision