முசிறி அருகே சாலை விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு

முசிறி அருகே சாலை விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தந்தை மகள் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் வடிவேல் (42), நாமக்கல் பகுதியில் கார் மெக்கானிக் வேலை பார்த்து வந்தவர் தனது மனைவி கஜபிரியா(31), அவரது குழந்தைகள் சர்மிளா (11),விஷாகன்(4) ஆகியோருடன் துறையூர் நோக்கி ஒரு காரில் சென்றுள்ளனர்.

காரினை வடிவேல் ஒட்டி சென்றுள்ளார். இவர் ஓட்டி வந்த காரும் அப்போது எதிரே முசிறி அருகே வடுகப்பட்டி சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராஜ்குமார் (35) என்பவர் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் வடிவேல் ஒட்டி வந்த காரில் பயணித்த சர்மிளா,கஜப்பிரியா, விஷாகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். ராஜ்குமார் ஓட்டி வந்த காரில் பயணித்த சுனில் (31) பிரதாப் (25) மற்றும் ராஜ்குமார் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு செல்லும் வழியில் வடிவேல் மகள் சர்மிளா உயிரிழந்தார்.

இறந்த வடிவேல் மற்றும் அவரது மகள் சர்மிளா ஆகியோரின் சடலம் முசிறி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறந்த வடிவேல் மனைவி மற்றும் மகன் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிரே காரில் வந்து விபத்துக்குள்ளான ராஜ்குமார், சுனில், பிரதாப் ஆகிய மூவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெம்புநாதபுரம் போலீஸார் வழக்கு பதிந்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision