திருச்சி மாநகரில் 2 கடைகளுக்கு சீல்

திருச்சி மாநகரில் 2 கடைகளுக்கு சீல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆயில் மில் செக் போஸ்ட் பகுதியில் உள்ள குமார் பீடா ஸ்டால் மற்றும் மதுரை ரோடு, நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு, கதீஜா பெட்டி கடை ஆகிய இரண்டு கடைகளிலும் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததால்

உணவு பாதுக்காப்புத்துறை ஆணையர் R. லால்வேனா அவசர தடையானை உத்தரவு படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R. ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி செல்வராஜ், வசந்தன்.ஸ்டாலின் மற்றும் இப்ராஹிம் கொண்ட குழுவால் அந்த இரண்டு கடைகளும் சீல் செய்யப்பட்டது.

மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R. ரமேஷ்பாபு அவர்கள் கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுபோன்று புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision