இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட் திருச்சியில் பறிமுதல்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட் திருச்சியில் பறிமுதல்

இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால், இ-சிகரெட்டு இறக்குமதிக்கும், விற்பனைக்கும் இந்திய அரசு தடை விதித்துள்ளது.

நிக்கோட்டின், நீர், கரைகின்ற மற்றும் சுவையூட்டும் பொருட்களை கலந்து நீராவியாக உள்ளிழுப்பது தான் வேப்பிங் - எனப்படுகிறது. இந்தியாவில் 7 இ-சிகரெட் உற்பத்தி, தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, விற்பனை, விநியோகம் மற்றும் இசிகரெட் தொடர்பான விளம்பரம் அனைத் தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2000 முதல் 3,000 ரூபாய் மதிப்புள்ள, இ-சிகரெட் விற்பனையை, 2019ல் தடை செய்தது. ஆனால், இளைஞர்களை கவரும் வகையில் ஸ்டைலான' தோற்றத்தில் வெளியாகும் இந்த சிகரெட் புதிய போதை பிராண்ட் ஆக மாறி உள்ளது. பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் இ-சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது இருந்த போதும் வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பல்வேறு சுவைகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் இ-சிகரெட்டிற்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர். இந்த நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து ஏர்லைன்ஸ் விமானம் வந்து இறங்கியது. அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகள் உடமைகளில் தடை செய்யப்பட்ட அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதி இல்லாத இ-சிகெரெட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.32 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள 1285 - இ-சிகெரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision