திருச்சி காவிரி ஆற்றில் பிரம்மாண்ட தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்கள்

திருச்சி காவிரி ஆற்றில் பிரம்மாண்ட தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்கள்

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி காவேரி ஆற்று பாலத்தில் மிக பிரமாண்ட அளவில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு ஓவியங்களை மக்களின் பார்வைக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (14.04.2024) ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி, துணை ஆட்சியர் வேலுமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமான் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision