முதியோர் இல்லத்திற்கு உதவிய கல்லூரி மாணவர்கள்

முதியோர் இல்லத்திற்கு உதவிய கல்லூரி மாணவர்கள்

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவு (25.11.2023) அன்று முதியோர் இல்லம் - செயின்ட் தாமஸ் மெர்சி இல்லத்திற்குச் சென்றது. செயின்ட் தாமஸ் மெர்சி இல்லத்தின் அருட்தந்தை சீனியர் சுப்பீரியர் உரையாற்றினார்.

 அவர் தனது உரையில்..... ஒரு சேவை சார்ந்த நிறுவனத்தை நடத்துவதில் தலைவர் எதிர்கொள்ளும் முதல்-நிலை சவால்களை விரிவாக எடுத்துரைத்தார். மக்கள் எந்த சூழ்நிலையில் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை தன்னார்வலர்கள் அறிந்து கொள்ளும் ஊடாடும் அமர்வு நடைபெற்றது. 58 தன்னார்வலர்கள் தாங்களாகவே அனாதை இல்லத்திற்கு ரூ.9000/- மதிப்புள்ள மளிகை, அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision