திருச்சியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி பறிமுதல் - தப்பி ஓடிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!!

திருச்சியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி பறிமுதல் - தப்பி ஓடிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!!

Advertisement

திருச்சி ஏர்போர்ட் அருகே செம்பட்டு சோதனைச்சாவடியில் சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 2 3/4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திருச்சி செம்பட்டு பகுதியில் புதுக்கோட்டை சாலையில் விமான நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொள்ளும்போது சரக்கு வாகனத்தில் 55 மூட்டைகளில் 50 கிலோ வீதம் 2 3/4டன் ரேசன் அரிசி கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில் வாகனத்தில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

Advertisement

இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த திருச்சி தேவதானம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிறுகாம்பூர் பகுதியிலிருந்து ரேஷன் மூட்டைகளை ஏற்றி வருவதாக தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்..