திருச்சி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஹைதராபாத் நோக்கி செல்லும் இண்டிகோ விமானம் நேற்று புறப்பட தயார் நிலையில் இருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சந்தோஷ் ராஜம் (23), என்பவரை சோதனை செய்ததோடு அவரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உடமையில் வெடிக்காத 5.56மிமீ அளவுள்ள துப்பாக்கி தோட்டா இருப்பதை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தோஷ் ராஜத்தை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவரிடம் நடத்தபட்ட விசாரணையில், அந்த துப்பாக்கி தோட்டா எங்கிருந்து தனது உடமைக்கு வந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் இருந்து முழு தகவல்களையும் பெற்றுக்கொண்டு போலீசார் அவரை ஜாமினில் விடுதலை செய்தனர்.