இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழுவின் சார்பில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் பேரவை கூட்டம் சாலை ரோடு உறையூர் GKM திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா தலைமை யேற்றார். பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் தோழர் சிவ.சூரியன், ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் தோழர் க. சுரேஷ், மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் தோழர்.ம. செல்வராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கியும் உறுதிமொழி எடுத்தும் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர். நா.பெரியசாமி சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சி. செல்வகுமார், பொருளாளர் சொக்கி . சண்முகம், மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க.இப்ராஹிம், பகுதி குழு செயலாளர்கள் இரா.சுரேஷ் முத்துச்சாமி, எஸ். பார்வதி, எஸ்.சையது அபுதாஹிர்,

பி.ராஜா, அ.அஞ்சுகம் ,ஒன்றிய செயலாளர்கள் எம்.ஆர். முருகன், எம்.ஆர்.எஸ்.ராஜலிங்கம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மேற்கு பகுதி குழு செயலாளர் இரா. சுரேஷ் முத்துச்சாமி நன்றி கூறினார். கூட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision