ஹோட்டல் மேலாண்மைப் படிப்புகள்: ஆதிதிராவிட மாணவர்களுக்கு வாய்ப்பு

ஹோட்டல் மேலாண்மைப் படிப்புகள்: ஆதிதிராவிட மாணவர்களுக்கு வாய்ப்பு

சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ISO (9001-2015) தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும், இந்நிறுவணம் சர்வதேச அங்ரீகாரம் பெற்றது. American Council of Business ஆல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

France நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey. 2022-ன் படி டலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலானவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13 வது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு B.sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்புஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப்படிப்பு மேலும் பத்தாம்வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைளினவூர்(Craftmanship Course in Food Production & Patisserie) படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன்நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தரபட்ட‌உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.

இதற்கான தகுதிகள் அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நோ பட்டபடிப்பு பயின National Testing Agency மூலம் நடத்தப்படும் National Council. For Hotel management Joint Entrance Examination NCHM JEE)ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில் தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படும். (2023-2024 ஆம் ஆண்டிற்கு National Testing Agency மூலம் நடத்தப்படும் NCHM JEE தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.04,2023) இப்படிப்பிற்கான சௌவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம், பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50.000/- முதல் ரூ.70,800/- வரை பதவி உயர்வின் அடிப்படையின் மாத ஊதியமாக பெறலாம் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவும் மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை. திருச்சிராப்பள்ளி-620001 (0431-2463966) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn