100% உர மானியத்தில் குறுவை சாகுபடி தொகுப்பினை விவசாயிகளுக்கு அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்

100% உர மானியத்தில் குறுவை சாகுபடி தொகுப்பினை விவசாயிகளுக்கு அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,லால்குடி ஒன்றியம் அன்பில் கிராமத்தில், வேளாண்மை -- உழவர் நலத்துறையின் சார்பில் ரூபாய் 40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே .என். நேரு அவர்கள் இன்று (25.6.22) திறந்து வைத்தார்.

 அதன்பின்னர்,தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி எல் அபிஷேகபுரத்தில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் குறுவை சாகுபடி தொகுப்பினை மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர்  மா.பிரதீப் குமார்,இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தஅ. சௌந்தரபாண்டியன், மாவட்டப் பிரமுகர் க. வைரமணி, ஒன்றியக் குழுத் தலைவர் தி இரவிச்சந்திரன் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO