போக்சோ வழக்கில் கைதானவர் புகார் கொடுத்தவரை வெட்டிய சம்பவம்

போக்சோ வழக்கில் கைதானவர் புகார் கொடுத்தவரை வெட்டிய சம்பவம்

 திருச்சி நவல்பட்டு காவல் சரகத்திற்க்குட்பட்ட காந்தலூர் பகுதியில் மணிகண்டன் என்பவருக்கும் பரமசிவத்திற்க்கும் தகராறு வந்துள்ளது. கடந்த ஆறு மாதத்துக்கு முன்னதாக பரமசிவம் மணிகண்டன் மீது போக்சோ வழக்கில் புகார் கொடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைக்கு சென்று தண்டனை பெற்றுள்ளார்.

 தற்பொழுது மீண்டும் இருவருக்கும் இடையே காந்தலூர் வயல்வெளி பகுதியில் தகராறு ஏற்பட்டதால் மணிகண்டன் பரமசிவத்தை கழுத்து, கால் பகுதிகளில் வெட்டி உள்ளார். பரமசிவம் சிகிச்சைக்காக மருத்துவமனயில்  அனுமதி. நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர். மணிகண்டன் தற்பொழுது தலைமறைவாகியுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

       
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn