ஊக்கத்தொகை 5 ஆயிரம் - திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

ஊக்கத்தொகை 5 ஆயிரம் - திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய (2023 – 2024) முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84(1)ன் கீழ் 5% ஊக்கத்தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை

ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5% முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், இம்மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn