திருச்சி அரசு மருத்துவமனையில் 2வருடம் முன்பு திருடு போன நகைகக்கு வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்ட சுவராஸ்யம்

திருச்சி அரசு மருத்துவமனையில் 2வருடம் முன்பு திருடு போன நகைகக்கு வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்ட சுவராஸ்யம்

கடந்த 05 .11 .2020 அன்று துறையூர் A.கீழபட்டி பகுதியை சேர்ந்த வளர்மதி தன் மகள் பிரியங்கா உடல்நிலை சரியில்லாத நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். 13.11.2020 அன்று அவர் வைத்திருந்த பையில் இருந்த  7 பவுன் நகைகள் மற்றும் பொருட்களை காணவில்லை என அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் மனு ரசீது மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது.

அதில் உண்மை தன்மை இல்லை என போலீஸார் சந்தேகித்தனர். இந்த நிலையில்   (14.3.2022 )அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த வளர்மதிக்கு நீதிபதி காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

காணாமல் போன பொருளை கண்டுபிடித்து தர வழக்கு பதிவு செய்ய இரண்டு வருடம் கழித்து நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றது சுவராஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO