திருச்சியில் போதையில் ஆம்னி வேன் கடத்தல்

திருச்சியில் போதையில் ஆம்னி வேன் கடத்தல்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பர்மா காலனி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் வரதராஜ் (40). இவர் ஆம்னி கார் சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வரதராஜ் தனது வீடு கட்டும் பணி நடைபெறுவதால் காட்டூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் முன்பு நேற்று முன்தினம் மாலை ஆம்னி வேனை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இரவு வந்து காரை எடுக்க வந்த பொழுது ஆம்னி வேன் அங்கு இல்லாததை கண்டு வரதராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பல இடங்களில் காரை தேடி வந்த நிலையில், ஆம்னி வேனை போதையில் கடத்திச் சென்ற வாலிபர் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் மலைக்கோயில் பகுதியில் உள்ள பேரிக்காடுகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் ஏதோ விபத்து நடந்து விட்டதாக எண்ணி போய் பார்த்து உள்ளனர். 

அப்பொழுதுதான் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடனடியாக ஆம்னி வேன் உரிமையாளர் வரதராஜுக்கு போன் செய்துள்ளனர். அவர் தனது கார் காணாமல் தேடி வந்ததாக கூறியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வரதராஜ் விரைந்து வந்ததோடு தனது ஆம்னி வேனை கடத்திச் சென்றவனை பொதுமக்கள் உதவியுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் திருவெறும்பூர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவன் பழனி தெற்கு நாயக்கன்பட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்த காளிதாஸ் மகன் முனீஸ்வரன் ( 21 ) என்பது தெரியவந்தது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முனீஸ்வரனை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision