மாபெரும் இருசக்கர வாகன பேரணி பங்கேற்க அழைப்பு

மாபெரும் இருசக்கர வாகன பேரணி பங்கேற்க அழைப்பு

திராவிட மாதம் கொண்டாட்டம் மற்றும் கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு திமுக மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நடத்தும் மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது (25.09.2021) ஞாயிறுக்கிழமை காலை 8:30 மணிக்கு கோகினூர் திரையரங்கில் தொடங்கி புத்தூர் பெரியார் மாளிகை அருகே நிறைவடைகிறது.

இந்த மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர,  ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, கழக, நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் இளைஞர்கள் திரளாக பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இப்பேரணியில் கலந்து கொள்ளபவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து வர வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO