நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வளர்ச்சிப் பணிகள், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற, மாணவ, மாணவிகள் இளைஞர்களுக்கு ஒருவாய்ப்பு வழங்க இருப்பதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைதளங்கள் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அரசியலுக்கு வர விருப்பம் விரும்பாமல் வேறு துறைகளில் பயணிக்க விரும்புபவர்களுக்கும் இந்த வாய்ப்பு மிக சிறப்பான அனுபவங்களை அளிக்கும். மக்கள் பிரதிநிதிகளுக்கும் மாணவர்கள் இளைஞர்களின் புதிய அணுகுமுறைகளை சிந்தனைகளை அறிந்து கொண்டு செயல்படுவது இது ஒரு நல்வாய்ப்பு.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இளம் தலைவர்களை உருவாக்குவதற்கான இந்த திட்டத்தை நமது நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு டெல்லியில் PRS legislatice போன்ற அமைப்புகள் இம்மாதிரியான வாய்ப்புகளை வழங்கி வருவதை தெரிந்து கொண்டேன்.

தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வாய்ப்பை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இதன் முதற்கட்டமாக எனது நாடாளுமன்றப் பணிகள் பல பணிகளில் அரசியல் பணிகளில் ஆர்வமும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இளைஞர்களுக்கு எனது தொகுதி மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருக்கிறேன்.

தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளவில்லை இந்தியாவில் தனிப்பட்ட முறையில்  மக்கள் பிரதிநிதிகள் யாரும் இம்மாதிரியான முயற்சியை முன்னெடுத்து இருப்பது அரிதான ஒன்று. இது ஒரு சிறப்பான வாய்ப்பு விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் இளைஞர்கள் இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பணியின் போது வழங்கப்படும் சான்றிதழ் பணி அனுபவம் மேற்படிப்புகள் வேலைவாய்ப்புகளில் கவனிக்கப்படும். இந்த முயற்சி வெற்றி அடைய உங்கள் அனைவரின் ஆதரவையும் இது தொடர்பாக உங்கள் மேலான கருத்துக்களையும் வரவேற்கிறேன் என்று தனது சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn