திருச்சி மத்திய சிறையிலிருந்து மருத்துவமனை வரும் வழியில் ஆயுள் கைதி மரணம்!

திருச்சி மத்திய சிறையிலிருந்து மருத்துவமனை வரும் வழியில் ஆயுள் கைதி மரணம்!

சிவகங்கை மாவட்டம், காளையர் கோவில், பெரிய கண்ணணூரைச் சேர்ந்தவர் அர்ஜுனன் ( 67 ). இவர் கடந்த 2015ம் ஆண்டு சிவகங்கையில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி ஆயுள் கைதியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக சிறைதுறையினருக்கு தெரித்ததையெடுத்து அவசர ஊர்தி மூலம் போலீஸ் பாதுகாப்போடு அர்ஜூனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது பாதி வழியிலேயே இறந்து விட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் அர்ஜூனன் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் உடற்கூறு செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதி அர்ஜூனனின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO