தீக்குச்சி கொளுத்தி வாக்கு சேகரித்த மதிமுக வேட்பாளர்

தீக்குச்சி கொளுத்தி வாக்கு சேகரித்த மதிமுக வேட்பாளர்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். நாள்தோறும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், சோபிஸ் கார்னர், வி.என்.நகர், குடமுருட்டி செக்போஸ்ட், பழைய கரூர் ரோடு மசூதி, துரை டீ கடை கார்னர், அண்ணாசிலை ரவுண்டானா, கோரிமேட்டுத் தெரு,

பூசாரி தெரு நுழைவு வாயில், வெனிஸ் தெரு, ஆண்டாள் தெரு கார்னர், வாணப்பட்டறை கோவில், ராஜபாண்டி அலுவலகம், மலைக்கோட்டை சுற்றுப்பிரகாரம், முனீஸ்வரன் கோவில், அன்பு மஹால் ரோடு, எம்ஜிஆர் சிலை, ஈ.பி.ரோடு விகேஎன் டீக்கடை, மகாராணி தியேட்டர் ரோடு, கலைஞர் மன்றம் டவுன் ஸ்டேசன், தேவதான் ரயில்வே கேட், கீழதேவதானம் ரோடு, சஞ்சீவி நகர் பிள்ளையார் கோவில், இறுதியாக நாகநாதர் டீ ஸ்டால் கொடிகம்பம் ஆகிய இடங்களில், வேட்பாளர் துரைவைகோவிற்கு ஆதரவாக தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளரும், கோட்டத் தலைவருமான மு.மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தோழமை இயக்க நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றார்கள். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு,

திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயசீலன், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி உள்ளிட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகளும் உடனிருந்தார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision