மணிப்பூர் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மணிப்பூர் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரங்கள் மற்றும் இளம் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவங்களை கண்டித்தும், மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (24.07.2023) தென்னூர் அரசமர அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் இருக்கும் பல்வேறு இன மக்களிடம் பாஜக தன் அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்பு அரசியலை விதைத்து அதன் மூலம் மோதலை உருவாக்கி ரத்த ஆற்றை ஓட வைத்திருக்கிறார்கள்.

காஷ்மீர் முதல் மணிப்பூர் வரை எட்டு வயது சிறுமியிலிருந்து 80 வயது பாட்டி வரை பாதுகாப்பில்லை பாதுகாப்பில்லை மோடி ஜி யின் புதிய இந்தியாவில் பாரத மாதாவுக்கு பாதுகாப்பு இல்லை டெல்லி முதல் மணிப்பூர் வரை பெண் காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை பாதுகாப்பில்லை பற்றி எரியுது மணிப்பூர் ஒரு மாநிலத்தின் நிர்வாணம் நம் தேசத்திற்க்கே அவமானம், கோஷங்கள் எழுப்பப்பட்டன சுதந்திர இந்தியாவை பாதுகாக்க பிஜேபி ஏ பதவி விலகு உள்ளிட்ட கோஷங்கள் முழங்கப்பட்டன

ஆர்ப்பாட்டத்தில் M I .ரபிக் அஹமத், S.ஸ்ரீதர் மாநில குழு அன்வர் உசேன் மாவட்ட குழு உறுப்பினர் V.ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூத்த தோழர் சம்பத் பகுதி குழுஉறுப்பினர்.M. வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn