அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள் கு ப கிருஷ்ணன் பேச்சு

அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள் கு ப கிருஷ்ணன் பேச்சு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கு ப கிருஷ்ணன் பேங்கர்ஸ் காலனி, களஞ்சியம், பர்மா காலனி, திம்ராய சமுத்திரம், திருவானைக்கோவில், தெப்பகுளம், பெரியார் நகர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு, மங்கம்மா நகர், கீதாபுரம், புதுத்தெரு, வீரேஸ்வரம் பகுதிகளில் பரப்புரையில் மேற்கொண்டார்.

பின்னர் பேசிய அவர்.. அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள் என்றும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நல்ல வளர்ச்சி கண்டு உள்ளார்கள் என்றும், திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி இன்றி வாழ்க்கை நடத்தி வந்தார்கள் என்றும், இப்பொழுது யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வதை விட யார் ஆளக்கூடாது என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று கூறி தனக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் தொடர் பரப்புரையின் போது தாகூர் தெருவைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் பெண் குழந்தைக்கு பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க முத்துசெல்வி என பெயர் சூட்டினார். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81