பருவ மழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்

பருவ மழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்

பருவ மழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் 80 கோடி ரூபாயில் ஆறுகளை தூர்வாரு பணி நடைபெற்று வருகிறது திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மகளிர் விடியல் பயண பேருந்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்காக 11 மகளிர் பேருந்துகள் தயார் செய்யப்பட்டது. பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் திறக்க காலதாமதமாவதால், இந்த மகளிர் பேருந்துகள் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர்கள் அதிகாரிகளை முதல்வர் அழைத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி உள்ளார். மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. 

திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் பணி, வீட்டு இணைப்பு கொடுத்தவுடன் 9 நாளில் பணிகள் முடிவடையும். சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது.80 கோடி ரூபாயில் ஆறுகளை தூர் வாரும் பணிகள் முதலமைச்சர் அறிவித்து, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கும் பொழுது முதல் இரண்டு போக பாசனத்திற்கு முதல் போக பாசன வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்து சம்பா பயிர் நடவு செய்யும்பொழுது அடுத்த கட்டமாக படிப்படியாக தூர்வாரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.இந்த நிகழ்வில் மேயர் மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் சரவணன் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் லிட்., கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர்

பொன்முடி, திருச்சிராப்பள்ளி மண்டல பொதுமேலாளர் சதீஷ்குமார், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி, மண்டலத் தலைவர்கள், தொமுச பொதுச்செயலாளர் குணசேகரன் , மாமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து கழக அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision