திருச்சியில் ஏடிஎம் மையங்களில் உள்ள 40 ஏசி கம்ப்ரசர் திருடிய நபர் பொதுமக்களால் விரட்டி பிடிப்பு 

திருச்சியில் ஏடிஎம் மையங்களில் உள்ள 40 ஏசி கம்ப்ரசர் திருடிய நபர் பொதுமக்களால் விரட்டி பிடிப்பு 
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்மின் ஏசி கம்பரசர் இயந்திரத்தை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பிடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அம்பிகாபுரத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த நபர்கள் ஏடிஎம்மின் ஏசி கம்பரசர் இயந்திரத்தை பழுது நீக்குவதாக கூறி திருட முயற்சித்தனர். 
மேலும் ஆட்டோவில் இயந்திரத்தை ஏற்ற முயற்சித்த போது சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த நபர்களிடம் விசாரித்தனர். அவர்களின் பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். அதில் ஒருவரை பிடித்து பொதுமக்கள் அரியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மற்ற நபர்கள் தப்பி ஓடினர். 
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிடிப்பட்ட நபர் திருச்சி தாராநல்லூரை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், இதற்கு முன்பு திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட வங்கி ஏடிஎம் ஏசி கம்பரசர் இயந்திரத்தை திருடியது தெரிய வந்தது. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO