திருச்சியில் ராட்சத பலூன் பறக்கவிட்ட அமைச்சர்கள்

திருச்சியில் ராட்சத பலூன் பறக்கவிட்ட அமைச்சர்கள்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

இதனை தொடர்ந்து திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்னை ரவுண்டானா, பகுதியில் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தை கொண்டாடும் விதமாக திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக ராட்சத பலூன் பறக்கவிட்டார்கள்.

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் வைரமணி, திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.