முரசொலி மாறன் 89வது பிறந்த நாள்- திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

முரசொலி மாறன் 89வது பிறந்த நாள்- திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மனசாட்சியாகவும் முன்னால் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்த முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் கே.என் சேகரன், என். கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், செந்தில், மு.மதிவாணன் தர்மராஜ்,  மோகன் டி பி எஸ் எஸ் ராஜ் முஹம்மத் மணிவேல் நீலமேகம் அணிகளின் அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

இதனைப்போன்று... மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 89- வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் முரசொலி மாறன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, பரணி குமார், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் செவ்வந்திலிங்கம், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, ராம்குமார், மற்றும்முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி பரணி குமார் மாவட்டத் துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் டோல்கேட் சுப்பிரமணி இளைஞர் அமைப்பாளர் ஆனந்த் காமராஜ் துர்கா தேவி கலைச்செல்வி மோகன்தாஸ் வழக்கறிஞர்கள் கவியரசன் அந்தோணி மணிபாரதி கார்த்திக் மாணிக்கம் துபேல் அஹமது கருத்து கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO