திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு  தலைமையில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் 14.08.2023ந் தேதி திங்கள்கிழமை இன்று காலை துவங்கினார்.

18-ம் நாள் போராட்டமாக இன்று மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் விவசயிகளின் ஆதிவாசி ஆக்கிவிட்டது என்று அரைநிர்வாணத்துடன் (கோவனதுடன்) இழைத்தலைகளை கட்டிக்கொண்டு ஆதிவாசி போன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் அரைநிர்வாணத்துடன் அணிந்து பங்குகொண்டவர்கள் : 1. அய்யாக்கண்ணு - மாநில தலைவர், 2. உத்தண்டன் ஆலத்துடையான்பட்டி உப்பிலயபுரம் ஒன்றியம், 3. சிறுப்பத்தூர் பெரியசாமி திருச்சி மாவட்டம், 4. கோட்டத்தூர் பெரியசாமி மாவட்ட செயலாளர் திருச்சி, 5. ஆண்டவர் (அரியலூர் மாவட்டதலைவர்) கரைவேட்டி அரியலூர் மாவட்டம்,

6. செல்லையாபிள்ளை வெள்ளைகல்பட்டி மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருச்சி மாவட்டம், 7. சுப்பையா கோளார்ப்பட்டி மணிகண்டம் ஒன்றியம் திருச்சி மாவட்டம், 8. நாசம்மாள் மாநில மகிளிரணி தலைவர் துவரங்குறிச்சி திருச்சி மாவட்டம்மற்றும்சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision