தர்காவில் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள்

தர்காவில் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள்

திருச்சியில் தர்காவில் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்

திருச்சி மலைக் கோட்டை அருகே உள்ள பெரிய கடை வீதி பகுதியில் பிரபலமான வியாபார நிறுவனங்கள் மற்றும் காந்தி மார்க்கெட் உள்ளது இந்நிலையில் பெரிய கடை வீதி, சந்து கடை பகுதியில் உள்ள ஹஜ்ரத் ஹீசேன்ஷா பண்டாரிஷா தர்காவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு வந்த காவல்துறையினர் அந்த தர்காவின் எதிரே உள்ள மளிகைக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூன்று இளைஞர்கள் அந்த தர்காவின் பூட்டை உடைத்து உண்டியலை திருடும் காட்சி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அந்த காட்சிகளை கைப்பற்றி உண்டியலை திருடிச் சென்ற இளைஞர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் திருட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் தர்காவில் இருந்த உண்டியலை திருடி சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிசிடிவி காட்சி : 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO