விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் சாலை மறியல் - கைது!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் சாலை மறியல் - கைது!

35 நாட்களாக டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்,பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், கொரோனா காலத்தில் வேலை இழந்து வருமானம் இழந்த விவசாய உட்பட தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் தொடங்கி தெப்பக்குளம் தலைமை தபால் நிலையத்தை நோக்கி மறியல் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பேரணியில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள், அலுவலகத்திற்கு செல்லக் கூடியவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் கைது செய்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Advertisement