திருச்சியில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ராக்கெட் விடும் நூதன போராட்டம்!

திருச்சியில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ராக்கெட் விடும் நூதன போராட்டம்!

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ராக்கெட் விடும் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

 டெல்லியில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடைசெய்ய வேண்டும், விவசாயிகளை இழிவுபடுத்து அவதூறாக சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய ராக்கெட்டை திருச்சியில் இருந்து மாண்புமிகு. பிரதமர் மோடி அவர்களுக்கு விட்டு, பதில் வரும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS