பெற்ற மகளை பாலியல் வன்மம் செய்த தந்தை -வழக்கு பதிவு தப்பி ஓட்டம்

பெற்ற மகளை பாலியல் வன்மம் செய்த தந்தை  -வழக்கு பதிவு தப்பி ஓட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே  தளுதாளப் பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவிராஜ் குமார் (38) . லாரி ஓட்டுனரான இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 14 வயதிற்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர் .

ரவிராஜ் குமார் லாரி ஓட்டுனராக வேலை செய்துவரும் நிலையில் இவரது மூத்த மகள் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக பருவம் அடைந்தார். இந்நிலையில் ரவிராஜ்குமார் மது அருந்தும் போதெல்லாம் தனது மனைவியிடம் அந்த விஷயத்திற்கு துன்புறுத்துவாராம். மனைவி மறுத்த நிலையில் 14 வயதான தன் மகள் என்றும் பாராமல் அந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பலமுறை பாலியல் வன்மம் செய்துள்ளார். புதன்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது தனது மகளின் அழும் சத்தம் கேட்டு பார்த்தபோது தன் கணவர் தனது மகளுடன் தகாத உறவு வைத்துள்ளது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சங்கீதா புகார் அளித்ததின் பேரில் போலீசார் லாரி ஓட்டுநரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ரவிராஜ்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO