காவேரி மருத்துவமனை குழுமத்தின் பிராண்ட் அம்பாஸ்டர் ஆகிறார் மகேந்திர சிங் தோனி. 

காவேரி மருத்துவமனை குழுமத்தின் பிராண்ட் அம்பாஸ்டர் ஆகிறார் மகேந்திர சிங் தோனி. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விளம்பர தூதராக தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றான காவேரி மருத்துவ குழுமம் அறிவித்திருக்கிறது. இது குறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" தோனியை எங்கள் குழுமத்தின் விளம்பர தூதராக அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். 

சிறிய ஊரில் இருந்து தொடங்கிய தோனியின் பயணமும் காவேரி மருத்துவ குழுமத்தின் பயணமும் ஏறக்குறைய ஒன்று தான். திருச்சியில் 30 படுக்கைகளுடன் தொடங்கி இன்று தமிழகம் மற்றும் பெங்களூரில் பல கிளைகளுடன் தற்போது இயங்கிக்கொண்டு இருக்கிறோம். அனைவராலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சிறப்பான மருத்துவத்தை மலிவு விலையில் வழங்குகிறோம். தோனியின் சிறந்த குணங்களும் அவரது உடல் ஆரோக்கியமும் காவேரி மருத்துவமனையின் கொள்கைகளை  பிரதிநிதித்துவம் படுத்த சிறப்பான அம்சங்களாக நாங்கள் பார்க்கிறோம்", என்று கூறியிருக்கின்றனர். 

மேலும் இது குறித்து தோனி பேசுகையில், "கடந்த இருபது ஆண்டுகளாக காவேரி மருத்துவமனை குழுமம் சிறப்பான மருத்துவ சேவையை ஆற்றி வருகிறது. இது போன்ற நம்பகமான மற்றும் புகழ்பெற்ற நிர்வாகத்துடன் கைகோற்பது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கிறது" , என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn