திருச்சி அருகே மகன் இறந்த செய்தியை கேட்டு தாய் மாரடைப்பால் மரணம்!!

திருச்சி அருகே மகன் இறந்த செய்தியை கேட்டு தாய் மாரடைப்பால் மரணம்!!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூரைச் சேர்ந்தவர் கனகராஜ்(60). இவர் இப்பகுதியில் உள்ள கால்நடை தனியார் மருத்துவராக வேலை பார்த்தார். கண்ணனூரில் இலை, வெற்றிலை வியாபாரமும் கடைத்தெருவில் வைத்து செய்து வந்தார் . நேற்று தனதுகடைக்கு எதிரே டீ சாப்பிட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஏறும் பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

Advertisement

இவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அவர் பாதியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார். கடையில் வியாபாரம் பார்த்து இருந்த தாய் சரச அம்மாள் மகன் கீழே விழுந்ததைபார்த்து படபடப்பு ஏற்பட்டது.

பின்னர் மகன் இறந்த செய்தியைக் கேட்டு மகனின் முகத்தை பார்த்த தாய் சரசு அம்மாள்(81)அதே இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்கள் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் இழந்ததால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் . இவர்கள் இருவரும் சடலத்தையும் ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது பார்ப்பவரை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த நிகழ்வு சுற்றுப்புற கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement