திருச்சி மக்களே உங்கள் மின் கட்டண அளவீட்டுத்தொகை அறிந்துக்கொள்ள   வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு

திருச்சி மக்களே  உங்கள் மின் கட்டண அளவீட்டுத்தொகை அறிந்துக்கொள்ள   வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு

அதிகரித்து வரும் கொரானா  தொற்று காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்  மே மாதத்திற்கான மின்கட்டணத்தை இணையவழியில் செலுத்திட வலியுறுத்தியுள்ளது. 

திருச்சியில் 2.14 லட்சம் நுகர்வோர்கள் இணையவழியிலேயே தங்களுடைய மே மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்துவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சீனிவாசன் நகர் (9445853469),
ஸ்ரீரங்கம் (9445853519),
உறையூர் (9445853468),
தில்லைநகர் (9445853467),
கன்டோன்மென்ட்(9445853462),
மலைக்கோட்டை (9445853472),
தென்னூர் (9445853466),
கேகே நகர் (9445853490),
திருவரம்பூர் (9445853492),
பொன்நகர் (9445853481),
சுப்ரமணியபுரம் (9445853487).

 


தொற்றுப்பரவல்  அதிகரித்து வரும் நிலையில் தான் நேரடியாக வீடுகளுக்கு வந்து மின் பணியாளர்கள் மின் கட்டணத்தின் அளவீடுகளை குறித்து செல்ல இயலாத நிலையிலும் மக்களிடையே அச்சத்தை  தவிர்க்கும் விதமாக வாட்ஸ்ஆப் எண்ணங்களை வெளியிட்டுள்ளனர்.

மக்களே தங்களுடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள மின் அளவீடுகளை தெளிவான  புகைப்படமாக எடுத்து வாட்ஸ்அப் வழியாக மின்வாரிய துறைக்கு அனுப்பப்பலாம்.  
அந்த அளவீட்டீற்கான   தொகையை கணக்கீடு செய்து அலுவலர்கள் சொல்லும் தொகையயை இணையவழியில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.  இதன்மூலம் தொற்று பரவலை தடுப்பதோடு மக்கள் வீட்டில் இருந்தபடியே எளிமையாக இதனை செய்து கொள்ளலாம்.
 வாட்ஸ்அப் இல்லாவிடில் இமெயில் மூலமாகவும் தங்களுடைய மின்கட்டண அளவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு   மின்சார வாரியத் துறை அறிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK