ஆபத்தான மின்கம்பத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆபத்தான மின்கம்பத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் ஊராட்சியில் அருந்ததியர் தெருவில் சிதைந்த நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் எப்பொழுது வேண்டுமென்றாலும் விழும் நிலையில் உள்ளது.

இந்த மின்கம்பத்தின் மூலம் 15 வீடுகளுக்கு மேல் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. எப்பொழுது வேண்டுமென்றாலும் விழக்கூடிய நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி தரக் கூறி கீரம்பூர் ஊராட்சி பொதுமக்கள் 10 மாதங்களுக்கு மேலாக கீரம்பூர் ஊராட்சி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மனுக்கள் கொடுத்தும் இதுவரை மாற்றி தரவில்லை.

இதற்கு மாறாக மின்சார வாரியம் அந்த மின்கம்பத்தை ஒரு கயிற்றினால் இழுத்து கட்டி வைத்துள்ளனர். இந்த சேதமடைந்த மின் கம்பத்தை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பட பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn