திருச்சி விஷன் செய்தி எதிரொலி உதவி ஆணையரிடம் மனு

திருச்சி விஷன் செய்தி எதிரொலி உதவி ஆணையரிடம் மனு

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்து நேற்று திருச்சி விஷன் செய்து வெளியிட்டது இதைச் சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் எம்பயர் கணேஷ் திருச்சி மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் ஹரியிடம் மனு அளித்துள்ளார்.

 அதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள உலக பிரசத்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மலைக்கோட்டை விநாயகர் கோவிலில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் தற்சமயம் சாக்கடை நீர் கலந்து வருகிறது மற்றும் அதனை சுற்றி உள்ள உணவு கடைகள் மற்றும் இதர கடைகள் மூலம் உள்ள வீணாகும் பொருட்களை தெப்பக்குளத்தில் வீசி எறிகின்றனர். இதற்கு தெப்பகுளத்தை சுற்றி உள்ள சுவற்றின் மேல் கம்பி வேலிகள் கட்டியும், சாக்கடை நீர் உள்ளே வராமல் தடுத்தும் மேலும் தெப்பக்குளத்தை தூர் வாரி சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். (வருடத்திற்கு ஒரு முறை சுவாமி தெப்பக்குளத்தில் தெப்பத்திற்கு வருவதால் சுத்தமாக்க போர்கால அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.