‌ திருச்சியில் ஏழு இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர்க்க கூட்டம்

‌ திருச்சியில் ஏழு இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர்க்க கூட்டம்

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

திருச்சி மாவட்டத்தில் நவம்பர்01-ஆம் தேதி (முதல் வெள்ளிக்கிழமை)துறையூர் கோட்ட அலுவலகத்திலும், 04 தேதி முசிறி கோட்ட அலுவலகத்திலும், 08ம் தேதி, லால்குடி கோட்ட அலுவலகத்திலும், 11ம் தேதி ‌ ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திலும், 15ம் தேதி திருச்சி நகரிய கோட்டஅலுவலகத்திலும், 18ம்தேதிதிருச்சி கிழக்கு கோட்ட அலுவலகத்திலும்,  22ந்தேதி மணப்பாறை கோட்ட அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், பொதுமக்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO