திருச்சி மசாஜ் சென்டரில் விபச்சாரம் - டிக் டாக் பிரபலம் கைது!!

திருச்சி மசாஜ் சென்டரில் விபச்சாரம் -  டிக் டாக் பிரபலம் கைது!!

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து பொன்மலை செல்லும் சர்வீஸ் ரோட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சன் ப்யூடி ஸ்பா என்கிற பெயரில் spa சென்டர் திறக்கப்பட்டது. இந்த சென்டரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இன்று இந்த சென்டரில் விபச்சாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்ட நிலையில்

தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கினர். இதில் அங்கு விபச்சாரத்திற்கு இரண்டு பெண்கள் ஈடுபடுத்தப்பட்டது உறுதியானது. உடனடியாக அந்த இரண்டு பெண்களையும் காவல்துறையினர் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

காவல்துறையினர் விசாரணையில் இந்த ஸ்பா சென்டரின் உரிமையாளரும், டிக் டாக் பிரபலம் சூர்யா (34) மற்றும் புதுக்கோட்டை கீரனூர் பகுதியை சேர்ந்த தினேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.