திருச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு (18.04.2023) அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் பொருட்டு (29.04.2023) சனிக்கிழமையன்று பணிநாளாக செயல்படும்.

இதே போன்று ஸ்ரீரங்கம் "அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற (19.04.2023) புதன்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற (13.05.2023) சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.