டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு - முற்றுகை - ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு - முற்றுகை - ஆர்ப்பாட்டம்

திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே உள்ள தையல்காரர் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக திறக்கப்பட உள்ள அரசு மதுபான கடையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தரைக்கடை வியாபாரிகள் சங்கம், காந்தி மார்க்கெட் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, கிழக்குபகுதி செயலாளர் சையத் அபுதாகிர், பொன்மலை பகுதி செயலாளர் P. ராஜா,புறநகர் மாவட்ட குழு உறுப்பினர் ஜி.ஆர். தினேஷ்குமார்,

மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் க.இப்ராகிம், மாமன்ற உறுப்பினர் எல் ஐ சி சங்கர், தாஸ் , சரவணன், ரவி, ஜெம்பு, குமார்மற்றும் பொதுமக்கள், 50 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மதுபான கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் முன்னிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மண்டல மேலாளருடன் தொலைபேசியில் பேசி புதிய டாஸ்மார்க் கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision