காவல் நிலையத்திற்குள் ஆறு போல் ஓடும் மழை நீர்

காவல் நிலையத்திற்குள் ஆறு போல் ஓடும் மழை நீர்

கோடை வெயில் திருச்சி மாவட்டத்தில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த ஒரு சில வாரங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கோடை மழை 5 நாட்களுக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதை அடுத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கிடையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.

தாழ்வான பகுதியில் காவல் நிலையம் உள்ளதால் மழை நீர் உள்ளே புகுந்ததை காவலர்கள் அதை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள் கணினி பொருட்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக இடத்தில் எடுத்து வைத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision