திருச்சியில் வாகை, தென்னை மரங்கள் வெட்டி கடத்தல்

திருச்சியில் வாகை, தென்னை மரங்கள் வெட்டி கடத்தல்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எல். அபிஷேகபுரம் கிராம பகுதியில் கொடுவாய் வாய்க்கால் கரையோரம் இரண்டு பெரிய வாகை மரம் உள்ளது. இந்த மரங்களை மிஷின் கொண்டு மர்ம நபர்கள் மரத்தை துண்டு துண்டாக அறுத்து எடுத்துச் செல்வதற்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் லால்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக அதே வாய்க்கால் கரையில் உள்ள உயிரோடு இருந்த ஏழு தென்னை மரத்தை பூ விட்டு பிஞ்சுகளோடு இருந்ததை மெஷின்களை கொண்டு அறுத்து கடத்தி சென்றனர். இந்த புகாரை தொடர்ந்து லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், எல்.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் கஸ்வர் நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாகை மரங்களை மெஷின்களைக் கொண்டு அறுத்து கடத்த முயன்ற மர்ம நபர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கஸ்வர் அளித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு லட்சம் மதிப்புள்ள மரத்தை அறுத்து கடத்த முயன்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision